2024 ஜனவரி 1ஆம் தேதிக்குள் அயோத்தியில் கோலாகலமாக திறக்கப்படும் ராமர் கோவில் - சொன்னதை செய்த பா.ஜ.க
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் தயாராகி விடும் என்று அமித்ஷா கூறினார்.
பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.இதையொட்டி அங்கு சப்ரும் என்ற இடத்தில் பா.ஜனதா ரத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். மாநில அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-
காங்கிரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ராமஜென்ம பூமி வழக்கை நீண்டகாலமாக கோர்டிலேயே வைத்து இழுத்தடித்தது ஆனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தவுடன் பிரதமர் மோடி பிரம்மாண்ட ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார்.