அரசு பள்ளி மாணவர்களுக்கு பத்து நாட்களாக அழுகிய முட்டை - அரசின் அலட்சியம் மாறுமா?
அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அழகிய முட்டை விநியோகம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அழகிய முட்டை விநியோகம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது, பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தமிழ்நாடு சொசைட்டி நிறுவனம் சார்பில் அரசு பள்ளிகளுக்கு சத்துணவு திட்டத்திற்கான முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 10 நாட்களாக விநியோகம் செய்யப்பட்ட முட்டைகள் துர்நாற்றத்துடன் அழுகிய நிலையில் இருந்ததாகவும் அதிகாரிகளிடம் இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்ட வில்லை என பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.