குழந்தையின் மாமிசத்தையே தாய்க்கு உணவாக அளித்த ISIS பயங்கரவாதிகள் - வெளியான பகீர் தகவல்!
எகிப்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு ஈராக் எம்.பி., கூறிய தகவல் உலகையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் பெண் ஒருவரை பாலியல் அடிமையாக சித்ரவதை செய்தது மட்டுமில்லாமல் அவரின் ஒரு வயது குழந்தையை அவருக்கே உணவாக கொடுத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
தனக்கு மூன்று நாள்களாக உணவு, தண்ணீர் எதுவும் கொடுக்காமல் சிறை வைத்திருந்ததாகவும், பின்னர் ஒரு தட்டில் அரிசியும், மாமிசமும் கொடுக்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். கடுமையான பசியால் அவர்கள் கொடுத்த உணவை உட்கொண்டதாகவும், அதற்கு பிறகே அது தனது ஒரு வயது மகனின் மாமிசம் என்பது தெரியவந்ததாக கண்ணீருடன் கூறியிருக்கிறார்.
அப்பெண்ணை மட்டுமின்றி, அவரின் ஆறு சகோதரிகளையும் சிறைவைத்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் சித்ரவதை செய்துவந்துள்ளனர். அதில், 10 வயதான அவரின் சகோதரி ஒருவரை குடும்பத்தார் கண் முன்னே பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
சன்னி இன பயங்கரவாத அமைப்புகள் இவற்றுக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், இவர்கள் இஸ்லாமியர்களின்கீழ் உலகம் ஒரு குடையாக ஒருங்கிணைய வேண்டும் என நோக்கில் செயல்படுபவர்களாக அறியப்படுகின்றனர். இவர்களின் ஆதிக்கமும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளும் தற்போது குறைந்துள்ளன.
Input From: Etv