ப.சிதம்பரம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு - சி.பி.ஐ குற்றச்சாட்டு பின்னணி என்ன?

சி.பி.ஐ.யின் மேல்மலையீட்டு மனு குறித்து ப.சிதம்பரம் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு விடுத்துள்ளது.

Update: 2022-09-24 09:30 GMT

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அனைத்து ஆவணங்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிட்ட விசாரணை கோர்ட் உத்தரவுக்கு எதிராக சி.பி.ஐ மனு தாக்கல் செய்தது .அந்த மனுவை தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.


அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு விசாரித்தது .சி.பி.ஐ சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆஐராகி,இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்வு காணும் வரை சி.பி.ஐ சிறப்பு கோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் வேண்டும் வாதித்தார்.


வாதத்தை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு,மேல்முறையீட்டு மனு தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.





 


Similar News