ஆப்கானிஸ்தானில் பெண்களும், ஆண்களும் பூங்காவிற்கு ஒன்றாக செல்லக்கூடாது: தலிபான் போட்ட புதிய கட்டளை!

Update: 2022-03-28 10:20 GMT

ஆப்கானிஸ்தானில் மக்களாட்சியை வீழ்த்தி பயங்கரவாதிகளான தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். இதனால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் 6ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி பயில்வதற்கு தலிபான்கள் தடை விதித்தனர். இதனால் மாணவிகளை துரத்திவிட்டு பள்ளிக்கு பூட்டுப்போட்டனர். இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது. அதே போன்று பெண்களுடன் ஆண்கள் வந்தால் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என இரண்டாவது கட்டுப்பாடுகளை விதித்தது. உலக நாட்டு பயணிகளிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆண்களும், பெண்களும் தற்போது ஒரே நாளில் பொதுழுபோக்கு பூங்காவிற்கு செல்வதற்கு தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இப்படி பொதுமக்களை வாட்டி வதைக்கும் தலிபான் அரசு உலக நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News