டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக் அனுமதி -

குடியரசு தினத்தை ஒட்டி வருகிற 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தியும் பங்கேற்க உள்ளது.

Update: 2023-01-04 06:00 GMT

குடியரசு தின விழாவை ஒட்டி ஆண்டு தோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். கடந்த ஆண்டு இந்த அணி வகுப்பில் தமிழக அரசு அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.


இந்த நிலையில் வருகிற 26 ஆம் தேதி நாட்டின் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள 'ராஜபாதை' சீரமைக்கப்பட்டு 'கடமையின் பாதை' ஆக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து அங்கு நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பையும் வீரர்களின் சாகசங்களையும் பார்க்கிறார்.


இந்த நிகழ்வில் இந்த ஆண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்தியும் பங்கேற்க உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கொரோனா கால வழிகாட்டல்களை பின்பற்றியும் அணிவகுப்புக்கான  பல்வேறு விதிமுறைகளை பின்பற்றியும் ஊர்திகளை வடிவமைக்குமாறு இந்த மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஊர்திகள் வடிவமைக்கும் பணிகள் டெல்லி கன்டோன்மென்பகுதியில் நடைபெறும். பணிகள் முடிந்ததும் அலங்கார ஊர்திகளுக்கான குழு அவற்றைப் பார்வையிட்டு அனுமதி வழங்கும் என கூறப்படுகிறது.



 


Similar News