அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச அழகி போட்டியில் வென்ற தமிழகப் பெண்
அமெரிக்காவில் சர்வதேச அழகி போட்டி நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி என்பவர் வெற்றி பெற்றார்.
கோவையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி இரு பெண் குழந்தைகளின் தாய். இவர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்றார். அதில் 'சர்வதேச மக்களின் தேர்வு' அழகி பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், அடுத்த முறை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு ப்ளாரன்ஸ் ஹெலன் நளினிக்கு கிடைத்துள்ளது.
மனநிலை சிகிச்சை நிபுணர் பெண், தொழில் முனைவாளர், எழுத்தாளர், யோகா பயிற்சியாளர் என்று பன்முகத் திறமை கொண்டவர். இவர் கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற 'மிசஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு கிளாசிக்' அழகி போட்டியில் பட்டம் வென்றார்.இவர் பல்வேறு சமூக சேவை பணிகளிலும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.