தோகைமலை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 59 வயது ஆசிரியர்

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

Update: 2022-09-02 11:00 GMT

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள குண்ணா கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மருதை.இவர் தோகைமலை அருகே உள்ள பொம்மநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிடைத்த தகவலின் பேரில் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அப்பள்ளி தலைமை ஆசிரியை, அறிவியல் ஆசிரியர் மீது குளித்தலை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் ஆசிரியர் மருதை மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் ஆசிரியர் மருதை இன்னும் பத்து மாதங்களுக்குப் பிறகு ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





 


Similar News