திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் டிக்கெட்கள் இனி ஆன்லைனில் - திருமலா-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட சூப்பர் அறிவிப்பு

திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்யும் டோக்கன் நாளை முதல் முன்பதிவு துவங்கப்படுகிறது.

Update: 2022-06-14 07:58 GMT

திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்யும் டோக்கன் நாளை முதல் முன்பதிவு துவங்கப்படுகிறது.


திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு திருமலையில் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வந்தன, ஆனால் டோக்கன்கள் பெறுவதற்கு பக்தர்கள் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.

எனவே இனிமேல் அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் பெற வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் அவசியமில்லை, ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை ஜூன் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு ஜூன் 16-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 750 டோக்கன்கள் என்ற அடிப்படையில் ஆன்லைனில் அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் இலவசமாக வழங்கப்படும்' என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Similar News