நோயாளிகளை கவனிக்காமல் செவிலியர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட அரசு மருத்துவர் - கவுந்தப்பாடி மக்கள் கொதிப்பு
பரிதவிப்பில் நோயாளிகள் இருக்கும்பொழுது உடன் வேலை பார்த்த செவிலியர்கள் உடன் அரைநிர்வாணமாக அரசு மருத்துவர் நீச்சல்குளத்தில் குளிக்கச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரிதவிப்பில் நோயாளிகள் இருக்கும்பொழுது உடன் வேலை பார்த்த செவிலியர்கள் உடன் அரைநிர்வாணமாக அரசு மருத்துவர் நீச்சல்குளத்தில் குளிக்கச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அடுத்த கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருப்பவர் தினகர். தலைமை மருத்துவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி இவர் வரம்புக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் பணி இருந்தும் விடுப்பு எடுத்துள்ளார், விடுப்பு எடுத்ததை மறைக்க தனது மகனை அழைத்து வந்து நோயாளிகளை கவனித்து கொள்ளும்படி கூறிவிட்டு மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் சகிதம் குழுவாக தனது காரில் ஊர் சுற்ற கிளம்பியுள்ளார் தினகர்.
செவிலியர்கள் உடன் அருகில் இருந்த நீச்சல் குளத்திற்கு சென்று அரை நிர்வாணத்துடன் குளியல் போட்டுள்ளார், அதற்கான புகைப்படம் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் நோயாளிகளை கவனிக்காமல் தலைமை டாக்டர் தலைமை மருத்துவர் இப்படி ஊர் சுற்றியதற்கான புகைப்படங்கள் ஆதாரத்துடன் வெளியாகி அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.
இதுகுறித்து மருத்துவர் தினகரிடம் அதிகாரிகள் விசாரித்ததில் ஞாயிற்றுக்கிழமை 'எனக்கு விடுமுறை அதனால் என்னுடன் பணிபுரியும் செவிலியர்கள் சுற்றுலா சென்றேன்' என ஆணவமாக பதில் கூறியுள்ளார். அவர் மேலும் அவர் பதில்கள் ஏற்றுக்கொள்ள வகையும் இல்லாததால் விரிவான அறிக்கை தயார் செய்து அதனை மாநில மருத்துவ பணிகள் இயக்குனருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் சுகாதாரத்துறை இயக்குனர் கோமதி ஈடுபட்டுள்ளார்.
இந்த விவகாரம் ஈரோடு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.