கவர்னர் மாளிகையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம பொருள்

கவர்னர் மாளிகையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம பொருள் .மோப்ப நாய் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை நடத்தினர்

Update: 2022-12-19 07:45 GMT

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் முக்கிய விருந்தினர்கள் தங்கும் இடம் உள்ளது. இந்த இல்லத்தின் அருகில் நேற்று மர்ம பொருள் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. இதனை அங்கிருந்து பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது சதிவேலையா என சந்தேகம் அடைந்த அவர்கள் உடனே இது குறித்து சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் கவர்னர் மாளிகைக்கு போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அது 'டிரோன்' போல இருந்ததால் தீவிரமாக ஆய்வு செய்தனர்.


ஒரு கட்டத்தில் அது வானிலை ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் பலூன் என்பது தெரியவந்தது. வானிலை ஆய்வுக்காக காலை மற்றும் மாலை வேலைகளில் பறக்க விடப்படும் பலூன் என்றும் அது செயலிழந்து விழுந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மோப்பநாய் உதவியுடனும் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஐந்து தனிப்படைகள் கவர்னர் மாளிகை முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.





 


Similar News