தமிழகத்தில் உயர்கிறது பேருந்து கட்டணங்கள் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறது என்ற தகவல்கள் கிடைத்துள்ளது
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறது என்ற தகவல்கள் கிடைத்துள்ளது
சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக அமைச்சர் நேரு வந்திருந்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, 'அ.தி.மு.க ஆட்சியில் கட்டுமான பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது நிதி ஆதாரத்தை அதிகரிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்கிறது' என்றார்.
மேலும் பேசிய அவர், 'சூழ்நிலைக்கேற்ப சிலவற்றின் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. மக்கள் பாதிக்காத வகையில் பேருந்து கட்டணம் உயர்த்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார்' என கூறினார்.