விஜய் திவாஸ் தினம் - வீரர்களின் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மலர் வைத்து அஞ்சலி

விஜய் திவாஸ் தினத்தை ஒட்டி தேசிய போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

Update: 2022-12-16 13:13 GMT

விஜய் திவாஸ் தினத்தை ஒட்டி தேசிய போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16ஆம் தேதி விஜய் திவாஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1971 ஆம் ஆண்டு போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசிய போர் நிகழ்விடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்திய முப்படைகளின் தலைமை தளபதி, ராணுவ தளபதி, விமானப்படை தளபதி, கடற்கரை துணை தளபதி தேசிய போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். 

Similar News