லஞ்ச பணத்துடன் செல்பி எடுத்து தன் போலீஸ் கணவனை சிக்க வைத்த மனைவி

கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்ட லஞ்ச பணத்துடன் மனைவி மற்றும் குழந்தைகள் எடுத்துக்கொண்ட செல்பியால் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-07-01 07:00 GMT

உத்திர பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் 'ரமேஷ் சந்திர சகானி'. இவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் கட்டு கட்டாக பரப்பி வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் கட்டுகளுடன் செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்திருந்தனர். அதில் மொத்தம் ரூபாய் 14 லட்சம் இருந்தது. இது ரமேஷ் சந்திர சகானி லஞ்சமாகப் பெற்ற பணம் என கூறப்படுகிறது .


இந்த புகைப்படத்தை சகானியின் மனைவி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். இது வைரலாக பரவி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் உடனடியாக ரமேஷ் சந்திர சகானியை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டனர். அத்துடன் இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது மாநில போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதனால் இந்த புகைப்படம் 2021- ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி எடுக்கப்பட்டது எனவுப் அப்போது தங்கள் குடும்ப சொத்து ஒன்றை விட்றதால் கிடைத்த பணம் இது எனவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சந்திர சகானி தெரிவித்துள்ளார். எனினும் இது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்ட லஞ்ச பணத்துடன் மனைவி மற்றும் குழந்தைகள் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிக்கி உள்ள சம்பவம் உத்திர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News