சாய்னா குறித்த அவதூறு - நடிகர் சித்தார்த்தை தேடி சென்றது சம்மன்

Update: 2022-01-21 02:15 GMT

சாய்னா நேவால் குறித்து ஆபாசமாக பேசி ஆர்வக்கோளாறு நடிகர் சித்தார்த்க்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பிரதமர் மோடி பஞ்சாப் விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் கருத்துக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அடிக்கடி ஆர்வக்கோளாறு கருத்து சொல்லும் நடிகர் சித்தார்த் ஆபாசமாக பதிவிட்டார். நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதெல்லாம் சமூகவலைதளத்தில் பேசும் வார்த்தையா என பலர் முகள் சுளித்தனர். பின்னர் இந்த விவகாரம் தேசிய மகளில் ஆணையம் வரை சென்றது. பின்னர் இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறை டி.ஜி.பி'க்கு நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் எழுதியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக காவல்துறை ஆணையல் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, "இரண்டு புகார்கள் வந்துள்ளன, அதில் ஒன்று அவதூறு வழக்கு, இது தொடர்பாக விசாரிக்க வேண்டி நடிகர் சித்தார்த்க்கு சம்மன் அனுப்பப்படுள்ளது" என தெரிவித்தார்.


Source - Maalai malar

Similar News