தமிழகத்தை மருத்துவ தரத்தில் உயர்த்தியதாக தி.மு.க செய்யும் போலி பிரச்சாரம் - உண்மையில் நடந்தவை என்ன?
நாட்டில் தற்பொழுது கொரோனோவின் கொடிய அலை வீசி வருகிறது. இந்த காலகட்டத்தில் எத்தனையோ தனியார் மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள், உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை வசதிகள் நம் தமிழ்நாட்டில் இருந்தாலும் இன்றளவும் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளே மக்களுக்கு உதவி புரிந்து வருகின்றன.
காரணம் தனியார் மருத்துமனைகளில் வசதிகள் இருந்தாலும் சாமானிய மக்களால் கொரோனோ சிகிச்சைக்கு அதிக பணம் செலவழிக்க இயலாத காரணத்தால் அரசு மருத்துகல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளே முன் நின்று மக்களை மரணத்தின் பிடியில் இருந்து காத்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் வழக்கம்போல் ஆபத்து காலத்தில் குட்டையை குழப்பி அதில் மீனை பிடிப்பது போல் இந்த பேரிடர் காலத்திலும் "பார்த்தீர்களா எங்கள் ஆட்சிகாலத்தில் நாங்கள் செய்த மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனைகள்தான் இன்று மக்களை காத்து வருகின்றன என சுய தம்பட்டம் அடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள்தான் இதுபோன்ற ஆபத்து காலத்தில் ஆதாரமில்லாத அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். இதன் உண்மைதன்மையை சற்று வரலாற்றை வைத்து ஆராய்ந்து பார்க்கும்போது பல வரலாற்று நிகழ்வுகள் நமக்கு கிடைக்கின்றன.
அதிலும் குறிப்பாக இப்பொழுது எதிர்கட்சியாக இருந்துகொண்டு ஆபத்து காலம் என்று கூட கருதாமல் நாங்கள் ஆட்சியில் அதை செய்தோம், இதை தூக்கி நிறுத்தினோம் என தி.மு.கவை சேர்ந்தவர்கள் பொய் பிரச்சாரம் செய்வதன் உண்மைத்தன்மை அப்பட்டமாக வெளிவருகிறது.
தமிழகத்தின் மருத்துவகல்லூரிகள் துவங்கப்பட்ட ஆண்டு அதன் ஆட்சிகாலம் அப்போதைய முதலவர் யாரென பார்த்தால் தி.மு.கவினரின் பொய்யான பிரச்சாரம் சாயம் வெளுத்து பல் இளிக்கிறது.
வரலாற்றை முதல் மருத்துவகல்லூரியான "மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்"லிருந்து பார்ப்போம். "எம்.எம்.சி எனப்படும் சென்னை மருத்துவ கல்லூரி துவங்கப்பட்ட ஆண்டு 1935 பிரிட்டிஷார் காலத்தில் அப்பொழுது 'வில்லியம் ஹென்றி' என்பவர் சென்னை மாகாணம் தலைவராக இருந்தார்.