மறக்குமா நெஞ்சம்...! ரசிகர்களை வச்சு செய்துவிட்டு பம்மிய ஏ.ஆர்.ரஸ்மான்..!

Update: 2023-09-12 15:23 GMT

ஏ.ஆர்.ரகுமான், கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தார். ஆனால் அன்றைய தினம் மழை வெளுத்து வாங்கியதால், அந்த இசை நிகழ்ச்சியை செப்டம்பர் 10-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். செப்டம்பர் 10-ந் தேதி மழை வந்தாலும் இசை நிகழ்ச்சியை நடத்துவோம் என இசை நிகழ்ச்சிகள் நடத்தினார் ஆனால் முறையான ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் இசை நிகழ்ச்சி சொதப்பியது 2000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களுக்கும் முறையான பார்ட்டி வசதி ஏன் உள்ளே விடுவதற்கு கூட முறையான அனுமதி வழங்கப்படாத காரணத்தினால் பலர் குழந்தைகளுடன் பெண்களும் ரோட்டில் நிற்க வேண்டிய நிலையாகிவிட்டது அதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவன குறைவாக இருந்த காரணத்தினால் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு ஏ ஆர் ரகுமான் நடந்த இசை நிகழ்ச்சிக்கு அருகிலேயே டிராபிக் ஜாம் ஆகும் அளவிற்கு வாகனங்கள் நெரிசலில் சிக்கினார் இதில் முதல்வர் ஸ்டாலினின் வாகனமும் அடங்கும் இதனால் இசை நிகழ்ச்சி காண வந்திருந்தவர்கள் கடுமையாக இசை நிகழ்ச்சி ஏற்பாட்டளரையும் ஏ ஆர் ரகுமானையும் திட்டி தீர்த்தனர்...

விஷயம் விபரீதமாவதை உணர்ந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் நீங்கள் வாங்கிய டிக்கெட்டுகள் அனைத்தையும் எங்களுக்கு இணையத்தின் மூலமாக பதிவிடுங்கள் என இணையத்தில் முகவரியை கொடுத்துள்ளார் இந்த இணையத்தில் கொடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு உங்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படும் என்கிற ரீதியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஏற்கனவே பட வாய்ப்புகள் குறைந்து விட்டது இப்பொழுது இதுபோன்று வேறு நடந்தால் அது தனக்கு இன்னும் பின்னடைவாக போய்விடும் என ஏ ஆர் ரகுமான் இப்படி செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன

Similar News