சொந்த அக்கா பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய மத போதகரின் தோழி!

Update: 2021-04-13 09:06 GMT

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் ஒருவரும் அவரது நண்பர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் வசிக்கும் ஒரு பிரபல பின்னணி பாடகி அவரது 15 வயது மகளை சென்னையில் உள்ள தங்கை வீட்டில் விடுமுறையை கழிக்க விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு சிறுமியின் சித்தி ஷெகினா ஷான், சித்தப்பா ஷான் ஜசீல் மற்றும் உறவினர் மகன் கிளாரோ ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். ஷெகினா ஷான் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அலைவ் சர்ச் என்ற ஜெபக் கூடத்தில் மத போதனை மற்றும் கிறிஸ்தவ பாடல்கள் பாடும் வழக்கம் உள்ளது.

எனவே சிறுமியை அடிக்கடி அங்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மத போதகர் ஹென்றி பால் என்பவர் சிறுமியுடன் பழகியதாக தெரிகிறது. அவரும் சர்ச்சுக்கு வரும்போது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் தெரிவிக்க சென்னை வந்த அவர் கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஷெகினா ஷான், அவரது கணவர் ஷான் ஜசீல், கிளாரோ மற்றும் மத போதகர் ஹென்றி பால் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷெகினா ஷான் அலைவ் சர்ச்சில் பாடல்கள் பாடி மத போதனை செய்பவர். ஓபரா பாடகியாக இருக்கும் இவர் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்ததாகவும் பின்னர் கணவர் ஷான் ஜசீலை சந்தித்த பின்னர் இயேசுவின் 'நற்செய்தியைக்' கேட்டு கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதாகவும், பின்னர் வெகு நாட்களாக அவரை வாட்டி வந்த நோய் 'அற்புதத்தால்' குணமான போது இயேசுவின் மீது நம்பிக்கை உறுதியாகி மதம் மாறியதாகவும் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பின்னர் பைபிள் கல்லூரியில் பயின்ற இவர் தற்போது சுகமளிக்கும் பிரார்த்தனை நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் அதன் மூலம் பலர் குணமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது கணவர் ஒரு இசையமைப்பாளர் என்று கூறப்படுகிறது. இருவரும் இணைந்து கிறிஸ்தவ மாணவர்களுக்கு இசை கற்பிக்க ஷெகினா ஷான் மினிஸ்ட்ரியின் கீழ் இசைப்பள்ளி தொடங்க திட்டமிட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவ மத போதகர்கள், மத மாற்றத்தில் ஈடுபடுபவர்கள் இது போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது தொடர்ந்து வரும்‌ நிலையில், சொந்த அக்காவின் மகள் என்று கூட பாராமல் ஒரு பெண்ணே பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதும், தனது கணவரையும் ஈடுபட வைத்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News