சட்டவிரோத மதமாற்றங்களுக்கு 11.44 கோடி - குஜராத்தை சேர்ந்த 'ஆல்பா மிஷனரி இயக்கம்' மீது LRO புகார்! @Legallro

Update: 2021-03-21 02:33 GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), குஜராத்தை சேர்ந்த ஆல்பா மிஷனரி இயக்கம், ஆல்பா பைபிள் சர்ச்சஸ் நடத்தும் ஆல்பா இன்டர்நேஷனல் மினிஸ்டரியிடமிருந்து 11.44 கோடி ரூபாய் சட்டவிரோத மதமாற்று வேலைகளுக்காக பெற்றுள்ளதாக குற்றம் காட்டியுள்ளது.


மேலும் இதே ஆல்பா இன்டர்நேஷனல் மினிஸ்டரி தான் இந்தியா, நேபாளம், ஆப்பிரிக்கா, மியான்மர், ஆசியா ஆகிய இடங்களில் சர்ச் பிளான்டஷனில் (Church Plantation) ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சர்ச் பிளான்டக்ஷன் என்பது உள்ளூர் அளவில் வெகு விரைவில் எப்படியாவது சர்ச்சுகளை நிறுவதாகும்.


அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்ட ஆல்பா இன்டர்நேஷனல் மினிஸ்டரியிடமிருந்து நிதி பெறும் குஜராத்தை சேர்ந்த ஆல்பா மிஷனரி இயக்கம் குறித்து விசாரணை கோரி உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக LRO தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News