குழந்தை சட்டவிரோத மதமாற்றங்களுக்கு 1.13 கோடி - 'Barrackpore Diocesan Council' மீது LRO புகார்! @Legallro

Update: 2021-04-14 06:28 GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), கொல்கத்தாவை சேர்ந்த Barrackpore Diocesan Council என்ற அமைப்பு Kindernothilfe Germany என்ற வெளிநாட்டு அமைப்பிடமிருந்து 1.13 கோடி ருபாய் நன்கொடையாக பெற்றுள்ளது.

குழந்தைகளை பாலியல் தொழிலில் இருந்து காப்பதாக புகைப்படங்கள் காட்டி, வெளிநாட்டினரிடம் இருந்து நிதி வசூலித்து அதைக் கொண்டு குழந்தைகளை பைபிள் வகுப்புகள் மூலம் கட்டாய மதமாற்றம் செய்வதற்கும், பல புதிய சர்ச்சுகளை கட்டுவதற்கும் பயன்படுத்துவதாக LRO குற்றம் சாட்டியுள்ளது.

உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News