அதிர்ச்சி! ஒரே முகவரியில் 4 மிஷனரி NGOக்கள்! அமெரிக்காவில் இருந்து ₹224 கோடி நிதி!
அதிர்ச்சி! ஒரே முகவரியில் 4 மிஷனரி NGOக்கள்! அமெரிக்காவில் இருந்து ₹224 கோடி நிதி!
சமூக சேவை என்ற போர்வையில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று அதை மத மாற்றம், இந்து மற்றும் இந்திய எதிர்ப்பு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு பயன்படுத்தும் பல NGOக்களை Legal Rights Observatory அமைப்பு வெளிக் கொண்டு வருகிறது. அண்மையில் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின் படி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு NGOக்கள் அமெரிக்காவில் இருந்து மத மாற்றத்துக்காக பெரிய அளவில் நிதி பெறுவது தெரிய வந்துள்ளது.
LRO தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த Grameen Nava Jagriti Yojana, Aadharshila Sansthan, Atma Vikas Sanstha, Christian Medical- Training Centre ஆகிய நான்கு அமைப்புக்களும் கடந்த ஐந்து ஆண்டுகளில் FCRA மூலம் ₹222.76 கோடி நிதி பெற்றதாகவும், இதை மத மாற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவதாகத் தெரிய வந்ததால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது.
#FCRAViolation #MadhyaPradesh NGOs Eye Hospital Grameen Nava Jagriti Yojana, Aadharshila Sansthan, Atma Vikas Sanstha, Christian Medical- Training Centre got Rs 222.76 Cr from #FCRA; lodged complaint at @HMOIndia seeking action for #Evangelist misuse #ConversionMafia @by2kaafi pic.twitter.com/i8k2f6RtxQ
— Legal Rights Observatory- LRO (@LegalLro) January 16, 2021
இந்த நான்கு அமைப்புகளுமே மத்திய பிரதேச மாநிலத்தின் தாமோ பகுதியில் இயங்குகின்றன. ஏன் இந்த நான்கு அமைப்புகளையும் ஒன்றாகக் குறிப்பிட வேண்டும் என்ற கேள்வி எழலாம். இவை அனைத்துமே Central India Christian Mission என்ற அமெரிக்க அமைப்பிடம் இருந்து நிதி பெறுவது தான் காரணம். இவற்றில் மூன்று அமைப்புகளின் நிர்வாகிகளும் ஒரே ஆட்கள் தான் என்பது மற்றொரு காரணம்.
ராஜ்கமல் டேவிட் லால் என்ற மதபோதகரும் அவரது மனைவி ஷீலா லாலும் Grameen Nava Jagriti Yojana அல்லது Nava Jagruti Education Societyயை நிர்வகிக்கிறார்கள். இவர்களது குடும்பமே மிஷனரி செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் Mid India Christian Mission என்ற பெயரில் வேறு ஒரு மிஷனரி அமைப்பை நடத்தி வருகிறார்கள்.
ரஜ்னீஷ் மோரிஸ் நியூட்டன், காதிர் யூசுப், ஃபிராங்க் ஹாரிசன் ஆகிய மூவரோடு ஜீவன் மசி என்பவரும் முன் குறிப்பிட்ட நான்கு அமைப்புகளில் மூன்றிற்கு நிர்வாகிகளாக இருக்கின்றனர். வழக்கம் போல சுகாதாரம், குடிநீர் வசதி, கல்வி, வேலைவாய்ப்பு, மனித உரிமைகள் என்று தாங்கள் சமூக சேவையில் ஈடுபடுவதாக இந்த அமைப்புகள் கூறிக் கொள்கின்றன. ஆனால் இவற்றுக்கு நிதி அளிக்கும் Central India Christian Missionன் நோக்கம் வேறாக இருக்கிறது.