தமிழ்நாட்டில் முதற்கட்டமாக அண்ணாமலை டிக் செய்த 8 தொகுதிகள் - மிஷன் 2024 ஆரம்பம்

வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் குறிப்பிட்ட சில தொகுதிகளை முதற்கட்டமாக குறி வைத்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இறங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2022-07-20 13:18 GMT

வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் குறிப்பிட்ட சில தொகுதிகளை முதற்கட்டமாக குறி வைத்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இறங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 எம்பி தொகுதிகளை குறி வைத்து வேலை செய்து வருகிறோம்' என அண்ணாமலை ஏற்கனவே கூறிய நிலையில் தற்பொழுது முதற்கட்டமாக எட்டு தொகுதிகளை தேர்வு செய்துள்ளார்கள்.

இதில் கன்னியாகுமரி, தென்சென்னை, சிவகங்கை, திருப்பூர், கோவை, ஈரோடு, ராமநாதபுரம், திருச்சி ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன இந்த எட்டு தொகுதிகளிலும் அண்ணாமலை தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இந்த தொகுதிகளுக்கான வேட்பாளரையும் பரிசீலித்து வருகிறார்கள்.

மேலும் அந்த தொகுதி நிலைமை யாருக்கு சாதகமாக உள்ளது? எந்த மாதிரியான கள வியூகங்கள் என அண்ணாமலை தலைமையிலான அணி ஒன்று வியூகம் வகுத்து வருவதாக தெரிகிறது. 2024 தேர்தலுக்கு பா.ஜ.க இப்பொழுது தனது ஆட்டத்தை துவக்கி விட்டது.


Source - Maalai malar

Similar News