சட்டவிரோத மதமாற்றங்களுக்கு ₹9.52 கோடி நன்கொடை - கிறுஸ்தவ அமைப்பு மீது அதிரடி புகார்!

Update: 2021-07-07 01:45 GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), சு-சமாச்சார் சேவா மண்டலி என்ற தன்னார்வ அமைப்பு, அமெரிக்காவை சேர்ந்த சுவிசேஷ மிஷனரி அமைப்பான குட் நியூஸ் பார் தி நேஷன்ஸ் (Goodnews For The Nations) என்ற அமைப்புக்கு இந்திய பிராக்சி போல் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

அதனுடைய சட்டவிரோத மதமாற்றங்களை மறைக்கும் விதமாக, இந்தியாவை சேர்ந்த IP முகவரிகள் மூலம் அதன் நடவடிக்கைகளளை கண்காணிப்பதை தடுத்துள்ளது.

இதுகுறித்து விசாரணை கோரி LRO உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News