தமிழகத்தில் பாஜக வளரக்கூடாதென்றால் மதமாற்றம் செய்யுங்கள் - வெளிப்படைய அறிவித்த திமுக ஆதரவாளர் ஷாலின் மரியா லாரன்ஸ்!

Activist and DMK sympathiser comes clean about the real agenda

Update: 2022-02-24 15:27 GMT

தமிழ்நாட்டில் "பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க" மத மாற்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் கிறிஸ்தவ ஆர்வலர். 

தன்னை ஒரு ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்று கூறிக்கொள்ளும் ஷாலின் மரியா லாரன்ஸ், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட இரண்டு வழிகள் "மதம்" மற்றும் "அயோதிதாசரையும் அம்பேத்கரையும் பின்பற்றுவது" எனக் கூறியுள்ளார். நாத்திகத்தை ஒரு ஆயுதமாக பாஜக பயன்படுத்துமோ என்று இவரை போன்ற எழுத்தாளர்கள் அஞ்சுகின்றனர். 

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றதன் எதிரொலியாகவே இது தெரிகிறது. மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால், "பாஜக மாநிலத்தில் ஊடுருவும்" என்பது அவர்களின் முக்கிய பிரச்சார முழக்கமாக இருந்தது. சென்னை 134வது வார்டில்,  உமா ஆனந்தன், பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதைய சட்டமன்றம் 100% பிராமணர் இல்லாதது என்று கொந்தளித்துக் கொண்டிருந்த திராவிடர்களின் மன அமைதியைக் குலைத்துவிட்டது போலத் தோன்றுகிறது.

இருப்பினும், கன்னியாகுமரியில் எப்படி மத மாற்றம் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று அவரது சொந்த கூட்டத்தினரே கருத்து தெரிவித்தனர். மாவட்டத்தில் அதிக வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றது. சக திமுக அனுதாபிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, மத மாற்றத்திற்காக வாதிட்ட வாக்கியத்தை ஷாலின் நீக்கிவிட்டார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் , சி.எஸ்.ஐ., தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், "இந்த அரசு உங்களால் (கிறிஸ்தவர்களால்) அமைக்கப்பட்டது" என்று கூறியிருந்தார் . அவரது கட்சியின் கிறிஸ்தவ எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் , லாவண்யா தனது மரண அறிவிப்பில் குறிப்பிட்டிருந்த கன்னியாஸ்திரி சகயா மேரியை பாராட்டினார். இது போன்ற சம்பவங்கள் இந்து ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 


Tags:    

Similar News