ஆண்டிமுத்து ராசாவின் இந்து மத அவதூறு பேச்சு - புகார்கள் குவிந்தும் நடவடிக்கை எடுக்காமல் கைகட்டி நிற்கும் காவல்துறை

இந்து மக்களை ஆண்டிமுத்து ராசா அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகளின் போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

Update: 2022-09-18 12:49 GMT

இந்து மக்களை ஆண்டிமுத்து ராசா அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகளின் போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

தி.மு.க எம்.பி ஆண்டிமுத்து ராசா இந்து மக்களை நீ விபச்சாரின் மகன் என அவதூறாக பேசியதை தொடர்ந்து நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் ஆண்டிமுத்து ராசாவை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்பினை புகார் மனு கொடுத்து வருகின்றனர். அதிமுகவினர் ஆண்டிமுத்து ராசாவின் உருவ படத்தை எரித்து வருகின்றனர். இன்று மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள ஜான்சிராணி சிலை அருகில் இந்து முன்னணி அமைப்பினர் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசாவை கைது செய்ய சொல்லி உருவப்படம் கிழித்து, எரித்து, செருப்பால் அடித்து எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.


ஒரு வார காலமாக போராட்டம் நடந்தும் காவல்துறை இந்த நிமிடம் வரை ஆண்டிமுத்து ராசா மீது நடவடிக்கை எடுக்கவில்லை.   


Source - Asisnet News

Similar News