தொடர் விடுமுறை, குவிந்த பயணிகள் - இதுதான் சான்ஸ் என ஆம்னி பேருந்து அடித்த கொள்ளைகள்

தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளால் கோயம்பேடு பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது.

Update: 2022-12-24 11:05 GMT

தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளால் கோயம்பேடு பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு மற்றும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஆனாலும் ஆம்னி பேருந்து உட்பட தனியார் பேருந்துகள் கட்டண விதிமுறைகளையும் தாண்டி அளவுக்கு அதிகமாக வசூலிப்பதால் புகார் எழுந்துள்ளது.

ஆனால் அரசு எதனையும் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். போதுமான அளவு பேருந்து இயக்காத காரணத்தினாலும், நிறைய பயணிகள் சரியான பேருந்து வசதி கிடைக்காததால் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. எதனால் கோயம்பேடு வளாகம் பரபரப்பாக காட்சி அளிக்கிறது.

Similar News