இங்கிலாந்தில் பரவும் கொரானாவின் புதிய திரிபு - உலக நாடுகள் உஷார்!
இங்கிலாந்தில் பரவும் கொரானாவின் புதிய திரிபு - உலக நாடுகள் உஷார்!
கடந்த வாரம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசரமாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் இங்கிலாந்து முழுவதற்கும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்தார்.
ஒரு புதிய மற்றும் ஆக்ரோஷமான கொரானா வைரஸ் திரிபு, இங்கிலாந்து முழுவதும் பரவி வருவதாக பதற்றங்கள் ஏற்கனவே உருவாகி வந்த நிலையில் இவ்வறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 20) இங்கிலாந்தில் ஒரே நாளில் புதிய சாதனையாக 35978 தொற்றுகள் பதிவானது. அன்று முதல் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்தில் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மிகவும் கடுமையான ஊரடங்கின் கீழ்வரும் என்று அறிவித்தார். பரவிவரும் புதிய கொரானா வைரஸ் திரிபு (strain) அதன் முந்தைய திரிபை விட 70 சதவிகிதம் அதிகம் பரவக்கூடியதாக இருக்கும் என்றும் அறிவித்தார்.
இந்த புதிய திரிபைப் பற்றி பல விஷயங்கள் அவ்வளவாக அறியப்படாத நிலையில், இங்கிலாந்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பாட்ரிக் வாலஸ் கூறுகையில், இந்த வைரசின் மரபணுவில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான மாற்றங்களும் திரிபுகளும் உருவாகி வருவதாக கூறினார். இது மற்ற திரிபுகளை விட மிக வேகமாக பரவும் என்றும் தெரிவித்தார். இருப்பினும் இந்த புதிய திரிபு இன்னும் கொரானா வைரஸ் பாதிப்பை தீவிரப்படுத்துமா என்பது குறித்து இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. மேலும் இது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பூசி முயற்சிகளை பாதிக்கும் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்த்தில் கடுமையான ஊரடங்கு என்பது, அத்தியாவசியமற்ற கடைகள், சினிமாக்கள, முடிவெட்டும் கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பல பொழுதுபோக்கு விஷயங்கள் இரண்டு வாரங்களுக்கு குறைந்தது மூடப்பட்டிருக்கும். மற்றொரு வீட்டை சேர்ந்த ஒருவரை மட்டுமே பொது இடத்தில் சந்திக்க முடியும்.
இது கிறிஸ்துமஸ் அன்று ஒரு குடும்பத்தினர் மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்கு செல்வதை தடுத்துவிடும். இங்கிலாந்தின் மற்ற பகுதிகளில் மற்றும் ஸ்காட்லாந்து, மற்றும் வேல்ஸில் குறைந்தபட்ச ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு வீட்டினர் மற்றொரு குடும்பத்தினரை சந்திக்க கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டுமே செல்ல முடியும்.