"கிறிஸ்தவர்களின் ஜெபத்தால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது"-அமைச்சர் பேச்சால் சர்ச்சை

கிருத்தவர்கள் ஜெபம் செய்ததனால் தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-08-03 03:08 GMT

கிருத்தவர்கள் ஜெபம் செய்ததனால் தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஜெபகோபுரம் AG தேவாலயம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவிற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அமைச்சர் சா.மு.நாசர் கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான் இன்று தமிழ் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

கிறிஸ்தவர்களின் ஜெபத்தின் வலிமையால் தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது என்று அவர் கூறினார். ஏற்கனவே ஜார்ஜ் பொன்னையா என்ற பாதிரியார் திமுக வெற்றி பெற்றது கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் போட்ட பிச்சை என்றும் எத்தனை கோவில்களுக்குச் சென்று குடமுழுக்கு விழா நடத்தினாலும் இந்துக்கள் யாரும் திமுகவிற்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகள் இந்திய இறையாண்மைக்கு எதிரான கடுமையான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் பெரியசாமிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.

தற்போது திமுக அமைச்சர் ஒருவரே திமுக வெற்றி பெற்றது கிறிஸ்தவர்கள் செய்த ஜெபத்தின் பயனால் தான் என்று தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிரியார் விஷயத்தில் வாயே திறக்காத திமுக இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source: News18 தமிழ்

Image Courtesy: News18 Tamil

Tags:    

Similar News