பா.ஜ.க'வை சேர்ந்த முக்கிய தலைவரை கொல்ல திட்டமா? - ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதி

இந்தியாவின் நாச வேலையில் ஈடுபட ஐ.எஸ் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.

Update: 2022-08-23 03:19 GMT

இந்தியாவின் நாச வேலையில் ஈடுபட ஐ.எஸ் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.


இந்தியாவில் ஆளும் பா.ஜ.க'வை சேர்ந்த முக்கிய நபரை கொலை செய்ய திட்டமிட்ட ஐ.எஸ் பயங்கரவாதி ரஷ்யாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிற்கு வருகை தந்து ஆளுங்கட்சியான பா.ஜ.க'வை சேர்ந்த முக்கிய தலைவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்த ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதியை ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி கைது செய்துள்ளது.

ரஷ்யாவின் மிக முக்கிய பாதுகாப்பு அமைப்பாளர் எஃப்.எஸ்.பி தீவிரவாத தடுப்பு, எல்லை பாதுகாப்பு கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


இந்த நிலையில் இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்த பயங்கரவாதியை ரஷ்யாவில் வைத்து அந்த அமைப்பு சுற்றி வளர்த்த கைது செய்துள்ளது.

கைதான அந்த பயங்கரவாதி மத்திய ஆசிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் துருக்கியில் ஐ.எஸ் இயக்க தலைவர்களில் ஒருவரால் தற்கொலை படை தாக்குதல் நடத்த ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் தேர்வு செய்யப்பட்டதும் எஃப்.எஸ்.பி'யின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் telegram செய்து வாயிலாக ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவரை தொடர்ந்து தொடர்பு கொண்டு வந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து ரஷ்யா சென்ற அவர் அங்கிருந்து விமான மூலம் இந்தியா செல்லத் திட்டம் திட்டி வந்ததாகவும் அதற்கான ஏற்பாடுகளில் பயங்கரவாதி ஈடுபட்டிருந்த பொழுது கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 17ஆம் தேதி அன்று ரஷ்யாவின் பாதுகாப்பு ஆலோசகரா நிக்கோலை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய திட்டம் தீட்டியவர் கைது செய்யப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Source - Polimer

Similar News