திருநங்கையர் முன்னேற்றத்தில் புதிய மைல்கல்லை எட்டிய மத்திய மோடி மற்றும் உ.பி யோகி அரசுகள் - குவியும் பாராட்டு!

உத்திர பிரதேச மாநிலம் திருநங்கையர் சமூகத்திற்கு பெரும் மாற்றத்தைக் கொண்டு வருகிறது.

Update: 2022-01-03 00:30 GMT

உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பணியாற்றும் யோகி ஆதித்யநாத் அவர்களின் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் திருநங்கையரின்(LGBTQ) சமூகத்திற்காக பல்வேறு மாற்றங்களை எதிர்நோக்கி வருகின்றது. அதில் குறிப்பாக திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சிலை உருவாக்குதல், மெட்ரோ நிலையத்தை அர்ப்பணிப்பது, திருநங்கைகளுக்காக இந்தியாவின் முதல் பல்கலைக்கழகத்தை அமைப்பது வரை திருநங்கையர் சமூகத்திற்கு பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய இரு தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். 


கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி, திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா, 2019-ஐ மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றியது. பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் ஒத்துப் போகாத திருநங்கைகள் மற்றும் பாலின வேறுபாடுகள் மற்றும் பாலினப் பண்புகளைக் கொண்ட நபர்களை உள்ளடக்கிய ஒரு மாற்று நபர் என்று மசோதா வரையறுக்கிறது. மேலும் இந்த மசோதா திருநங்கைகள் சமூகத்திற்கு முழுவதுமாக பாதுகாப்புகளை அளிக்கும். மேலும் சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் அத்துமீறல் பிரச்சினை களையும் தட்டிக் கேட்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் இந்த மசோதா, ஒரு திருநங்கை அடையாளச் சான்றிதழைப் பெற வேண்டும் என்று அது கட்டாயப்படுத்துகிறது. இது அவர் திருநங்கை என்ற அடையாளத்தையும் மசோதாவின் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளையும் வழங்கும்.


கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு, பொதுவில் கிடைக்கும் பொருட்கள், வீடு, சுகாதாரம் மற்றும் பிற சேவைகளுக்கான அணுகல் போன்ற துறைகளில் சேவை செய்ய மறுப்பது அல்லது தகாத முறையில் நடந்துகொள்வது உட்பட திருநங்கைகளுக்கு எதிரான பாகுபாட்டை இந்த மசோதா தடை செய்கிறது. ஒரு நேர்மறையான வளர்ச்சியில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, மாநிலத்தின் திருநங்கைகள் பூர்வீக விவசாய நிலங்களை வாரிசாகப் பெற அனுமதியை விளங்குகிறது.


கல்வி நிறுவனங்கள் பாகுபாடு இல்லாமல் திருநங்கைகளுக்கு உள்ளடக்கிய கல்வி மற்றும் விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு வாய்ப்புகளை வழங்கும். சமீபத்தில் மோடி அரசு திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சிலை உருவாக்கி, சமூகத்தின் உறுப்பினர்கள் சமத்துவம் மற்றும் அவர்களின் முழுப் பங்கேற்பைப் பெறுவதற்கான கொள்கைகள், திட்டங்கள், சட்டம் மற்றும் திட்டங்களை உருவாக்கியது. இந்த கவுன்சில் அரசின் கீழ் திருநங்கைகளுக்கான பாதுகாப்பு முழுமையாக வழங்கப்படும். இந்த கவுன்சிலிங் நல்லதை மட்டும் அல்ல, திருநங்கைகள் தங்களுடைய வாழ்க்கையை இப்படி வாழக் கூடாது? என்பதையும் எச்சரிக்கிறது. மசோதா பின்வருவனவற்றை ஒரு குற்றமாக அங்கீகரிக்கிறது. திருநங்கைகளை பிச்சை எடுப்பது, வற்புறுத்துவது, கொத்தடிமையாக வேலை செய்வது, அவர்கள் பொது இடத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பது, அவர்களை உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும், வார்த்தை ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், நிதி ரீதியாகவும் துன்புறுத்துவது கூடாது என்றும் இந்த கவுன்சிலிங் வலியுறுத்துகிறது.


இந்தியாவின் முதல் திருநங்கைகள் பல்கலைக்கழகத்தைத் திறப்பதற்கான உத்திரப்பிரதேச அரசாங்கத்தின் முன்முயற்சி, முழு LGBTQ சமூகத்திற்கும் நம்பிக்கையின் ஒளிக்கதிர் ஆக இந்த செயல் பார்க்கப்படுகிறது. ஆரம்பப் பள்ளி முதல் கல்வி வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், அரசாங்கம் அவர்களுக்கு அதிகாரமளிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்க்கையை நடத்தவும் உதவும். இதுமட்டுமின்றி, இந்தியாவில் முதல் திருநங்கைகள் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்கிறது. உத்திரபிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்காக பிரத்யேகமாக நாட்டிலேயே முதன்முறையாக பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளது. அதன் உறுப்பினர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் PG வரை படிக்கவும், ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெறவும் உதவுகிறது. திருநங்கையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி பெறுவது நாட்டிலேயே முதல் முறையாகும். எனவே அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வது முதல் அவர்களுக்கு கல்வி அறிவு புகட்டி, வேலைவாய்ப்பு வழங்குவது வரை தற்போது உள்ள மோடி தலைமையிலான அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கும் பாரபட்சமின்றி சேவைகளை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Organiser

Tags:    

Similar News