#IndiaTogether இந்தியாவை பணிய வைக்க நினைக்கும் அந்நிய சக்திகள் - காட்டிக் கொடுத்த சிறுமி கிரேட்டா.!
குடியரசு தினத்தன்று நடந்த வன்முறையை தடை செய்யப்பட்ட காலிஸ்தானி அமைப்பு திட்டமிட்டதா.?
தலைநகர் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் பல திடுக்கிடத்தக்க திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்னர் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி செல்ல அனுமதி கேட்ட போராட்டக்காரர்கள் செங்கோட்டைக்குச் சென்று அங்கு ஏற்றப்பட்ட மூவர்ணக் கொடிக்கு இணையாக காலிஸ்தான் கொடியை ஏற்றி, டெல்லி காவல் துறையினர் மீது வன்முறையில் ஈடுபட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
அப்போதே விவசாயிகள் போராட்டம் திசை மாறி விட்டதாகவும் காலிஸ்தான் இயக்கத்தினரால் பின்னிருந்து இயக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறையை ஆதரித்து Sikhs For Justice (SFJ) என்ற காலிஸ்தானி அமைப்பு வீடியோ வெளியிட்டது. காலிஸ்தான் கொடியை ஏற்றியவர்களுக்கு பரிசளிப்பதாகவும் அறிவித்தது. SFJ இந்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி வன்முறை குறித்து உண்மைகள் வெளிவந்து கொண்டிருந்த அதே வேளையில், திடீரென பாப் பாடகி ரைஹானா, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் மகள் மீனா ஹாரிஸ், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக அடையாளப்படுத்திக் கொள்ளும் சிறுமி கிரேட்டா தன்பர்க் மற்றும் ஒரு அமெரிக்க செனட் உறுப்பினர் என வெளிநாட்டினர் பலர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இந்திய அரசு மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை வெளிநாட்டினர் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் இந்திய உள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என்று அறிக்கை வெளியிட்டது. தற்போது தடை செய்யப்பட்ட SFJ அமைப்பு விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் ட்வீட் செய்ததன் பின்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது.
This was part of an Eloberate plan by a group of Porn Stars. This Tweet was planned long before by team managing the likes of @GretaThunberg @rihanna . Kindly share the link below maximum.#IndiaAgainstPropaganda #IndiaTogether #IndiaWithModi https://t.co/PxVr1SkeCw https://t.co/bXCotMrb9d pic.twitter.com/dfj5qrPiE9
— திராவிட குண்டன் (@draavidagundan) February 3, 2021