இந்துக்கள் பண்டிகையை இஷ்டத்திற்கு மாற்றும் தி.மு.க - இந்துக்கள் என்றால் இளக்காரமா?
இந்துக்கள் பண்டிகையை இஷ்டத்திற்கு மாற்றும் தி.மு.க - இந்துக்கள் என்றால் இளக்காரமா?
ஒரு சமுதாயத்தின் வாழ்வின் வழிமுறை என்பது அந்த சமுதாயத்தின் மக்கள் கடைபிடிக்கும் சம்பிரதாயம் மற்றும் சடங்குகளை சார்ந்தது. அந்த சம்பிரதாயம் மற்றும் சடங்குகள் மூலம் மக்களை ஒருநிலைப்படுத்தி வாழ்வில் வழி மாறாமல் சிறப்புடன் வாழ மூதாதையர்களால் ஏற்படுத்தப்பட்டதே சடங்கு சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள். அப்படிப்பட்டவைகளில் ஒன்றுதான் பண்டிகைகள்.
பழம்பெரும் சம்பிரதாயங்கள் மக்களுக்கு மறவாமல் இருப்பதும் அவைகள் அடுத்த தலைமுறைக்கு பழக்கப்படுத்தி பின்பற்ற வைக்க பெரிதும் பண்டிகைகள் உதவுகின்றன.
அப்படிப்பட்ட பண்டிகைகளை மக்கள் கொண்டாடும் காலங்களில் அவை பற்றிய புரிதலை தான் விரும்பும் அரசியல் காரணத்தை புகுத்தி மக்களை குழப்புவதற்கு பெயரும் "மத மாற்றம்"தான். சனாதனம் என்னும் இந்து மதத்தின் சிறப்பே பழம்பெறும் பண்டிகைகள் தான் ஆனால் அப்படிப்பட்ட பண்டிகைகளை மக்களை மறக்கடிக்க வைப்பது, சமத்துவம் என்ற பெயரில் அதனை மடைமாற்றுவது என அத்தனை வேலைகளையும் தி.மு.க செய்து வருகிறது.
தமிழ் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம், ஆயுத பூஜை, தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற பண்டிகைகளை மக்களுக்கு விடுமுறை நாளாக மட்டும் பழக்கி அதற்கு வாழ்த்துக்கள் கூற சொல்லாமல் மறக்கடித்து வந்த தி.மு.க பொங்கல் பண்டிகையை தமிழ் புத்தாண்டு என மாற்றி சமத்துவ பொங்கல் என உருவகம் செய்து அதில் தான் நினைக்கும் அரசியல் காரணிகளை புகுத்தி மக்களை மழுங்கடிக்க செய்யும் செயலை செய்து வருகிறது.
மறைந்த தி.மு.க தலைவர் ஆட்சிக்காலத்தில் பொங்கல் விழா "தமிழ்புத்தாண்டு" என மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. மக்கள் குழம்பினர் அதற்கு மேற்கோளாக பல காரணங்கள் அடுக்கப்பட்டது. ஆனால் அனைத்தும் அரசியல் காரணங்களே தவிர புராண காரணங்களோ, ஆச்சார விதிகளின் காரணங்களோ அல்ல.
ஆனால் மற்ற சமுதாய பண்டிகைகளான கிருஸ்துமஸ், ரம்ஜான் போன்றவை எவ்வித மாற்றங்களும் இன்றி தி.மு.க தலைவர்களால் அப்படியே ஏற்றுக்கொள்ள பட்டது. காரணம் "தேர்தல் அரசியல்" அதன் விளைவான வாக்கு வங்கி.