ஆண்டவன் தான் அதிகாரிகளுக்கு பிச்சை இடவேண்டும், அதிகாரி என்ன ஆண்டவனுக்கு பிச்சை போடுறது - அறநிலையத்துறையை கிழித்தெடுத்த பொன் மாணிக்கவேல்

'தமிழகத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை தேவையற்றது' என முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.

Update: 2022-11-21 02:03 GMT

'தமிழகத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை தேவையற்றது' என முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.

'தமிழகத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை தேவையற்றது அருங்காட்சியகத்தில் உள்ள சுவாமி சிலைகளை அரசு உரிய கோயில்களில் ஒப்படைக்க வேண்டும்' என சிலை கட்டுதல் தடுப்பு பிரிவு பொன் மாணிக்கவேல் பேசினார்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் உலக சிவனடியார்களுக்குகான அடையாள அட்டை வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது, 'இந்து அறநிலையத்துறை என்பதே தமிழகத்திற்கு தேவையில்லாதது. பக்தர்கள் கோவில் உண்டியலில் காணிக்கையாக பணம் போட வேண்டாம், வாழ்வாதாரம் இன்றி தவிர்க்கும் அர்ச்சகர்கள் தட்டில் காணிக்கை செலுத்துங்கள். ஆண்டவன் தான் அதிகாரிகளுக்கு பிச்சை இடவேண்டும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஆண்டவனுக்கு பிச்சையிட முடியாது.

கோவில் கல்வெட்டுகளில் இருந்து அதிகாரிகளின் பெயர்களை நீக்க வேண்டும். சென்னை அருங்காட்சியத்தில் காட்சி பொருளாக உள்ள புராண காலத்து 2500 சுவாமி சிலைகளை உரிய கோவில்களில் ஒப்படைத்து ஆகம விதிகளின்படி வைத்து பக்தர்களின் தரிசனத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். இதற்காக தமிழக அரசு மனதிறந்து முன்வந்து செய்ய வேண்டும், இது தமிழக அரசின் கடமை' என பேசினார்.


Source - Dinamalar

Similar News