சிறார்களை சட்டவிரோதமாக மத மாற்றும் சர்ச்சையில் திருச்சூர் கிறித்தவ Franciscan Clarist Congregation !

Update: 2021-08-15 06:33 GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), கேரளாவின் திருச்சூரில் அமைந்துள்ள Franciscan Clarist Congregation உலகளாவிய மதமாற்ற சக்திகளிடமிருந்து 20 கோடி ருபாய் நிதி பெற்றதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.



அதன் முக்கிய செயலாளர்கள் பல FCRA விதிகளை மீறியுள்ளதோடு மட்டுமல்லாமல் பல சிறார்களின் சட்ட விரோத மதமாற்றத்தில் ஈடுபட்டு, பண மோசடி செய்வதற்காகவே பல அமைப்புகளின் வலையை உருவாகியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து விசாரணை கோரி உள்துறை அமைச்சகத்திற்கு LRO கடிதம் எழுதியுள்ளது. உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cover Image Courtesy: LegalLRO

Tags:    

Similar News