எம்.பி வெங்கடேசனின் அதீத ஆர்வம் - 'பூர்வாங்க பணி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அவசரப்பட்டு உடைந்த காம்ரேட் மூக்கு

மதுரை அதீத ஆர்வம் கொண்ட எம்.பி வெங்கடேசன் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் அவசரப்பட்டு மூக்குடைந்துள்ளார்.

Update: 2022-09-23 12:20 GMT

மதுரை அதீத ஆர்வம் கொண்ட எம்.பி வெங்கடேசன் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் அவசரப்பட்டு மூக்குடைந்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொழுது, 'மதுரை எய்ம்ஸ் கட்டுமான பூர்வாங்க பணிகள் 95% முடிந்ததாக' தெரிவித்தார். உடனே எதை வைத்து விளம்பரம் தேடலாம் என 24 மணி நேரமும் யோசித்துக் கொண்டிருக்கும் கம்யூனிச எம்.பி வெங்கடேசன் மதுரை எய்ம்ஸ் கட்ட திட்டமிடப்பட்டிருக்கும் பகுதிக்கு சென்று இங்கே எந்த பணிகளும் நடைபெறவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தை பகிர்ந்து உள்ளார்




அதாவது ஜே.பி.நட்டா கூறியதாவது மதுரை எய்ம்ஸ் பணிகள் பூர்வாங்கமாக 95% முடிந்துள்ளது என கூறினார், அப்படி என்றால் அதனுடைய முதற்கட்ட பணிகளான அரசு நிலம் ஒதுக்கியது, அதற்கு உண்டான அரசாங்க ஆவணப் பணிகளில் 95 சதவீதம் முடிவடைந்ததாக கூறினார். இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்ததாக அவர் எங்கேயும் கூறவில்லை ஆனால் இதனை எப்படியாவது தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்த வேண்டும் என நினைத்தேன் கம்யூனிச எம்.பி.வெங்கடேசன் உடனே அந்த இடத்திற்கு ஓடிச்சென்று ஜே.பி.நட்டா கூறியதை பொய் என நிரூபிக்க முயற்சி செய்து மூக்குடைபட்டார்,




 


அதனை இப்போது சமூக வலைதளங்களில் 'எம்.பி.வெங்கடேசனின் விளம்பர மோகம் பாரீர்' என நெட்டிசன்கள் அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

Similar News