நாமக்கல் கவிஞரும் 'சங்கி'யே! - வரலாற்றை திரித்த திராவிட இயக்க பித்தலாட்டம்
நாமக்கல் கவிஞர், வே ராமலிங்கம் பிள்ளை திராவிட சிந்தனை கொண்டவர் என திட்டமிட்டு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன, ஆனால் நாமக்கல் கவிஞர், வே ராமலிங்கம் பிள்ளை தேசிய சிந்தனையும், தெய்வபக்தியும் கொண்டவர்.
நாமக்கல் கவிஞர், வே ராமலிங்கம் பிள்ளை திராவிட சிந்தனை கொண்டவர் என திட்டமிட்டு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன, ஆனால் நாமக்கல் கவிஞர், வே ராமலிங்கம் பிள்ளை தேசிய சிந்தனையும், தெய்வபக்தியும் கொண்டவர்.
"தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா..."
"தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அதற்கோர் குணமுண்டு..."
இவை எல்லாம் எண்ணற்ற திராவிட மேடைகளில் காலம் காலமாக முழங்கி வரும் வரிகள். இவற்றுக்குச் சொந்தக்காரர் நாமக்கல் கவிஞர், வே ராமலிங்கம் பிள்ளை. இந்த வரிகளை மட்டும் படித்துவிட்டு, இன்றைய திராவிட மாடல்களுக்கு அடித்தளம் அமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்ற எண்ணம் தோன்றலாம்.
இன்றைய சமூக நீதி வியாபாரிகள் எப்படி தாதாஸாஹேப் அம்பேத்கரை தவறாக மேற்கோள் காட்டுகிறார்களோ, அப்படித்தான் நாமக்கல் கவிஞரையும் தமிழ் வியாபாரிகள் மேற்கோள் காட்டுகிறார்கள். நாமக்கல் கவிஞர் அடிப்படையில் ஒரு தேசியவாதி, அதிலும் குறிப்பாக காந்தியவாதி.
கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்
மகாத்மா காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகத்திற்கு தென்னிந்தியாவில் ஊக்கமளித்த இந்த அமர கவிதை நாமக்கல் கவிஞர் எழுதியது.
நாமக்கல் கவிஞர் முதல், மாபோசி, ஜீவானந்தம், புலமைப்பித்தன் வரை எந்த உண்மையான தமிழறிஞரும் அரசியல் சார்ந்த மொழிவாதத்தை ஏற்கவில்லை. சொல்லப்போனால், நாமக்கல் கவிஞர் திராவிட அரசியல் கருத்தியலை நேரடியாகவே எதிர்த்துள்ளார்.
இதற்கு அவரது தேசியவாத சிந்தனை மட்டும் காரணமல்ல. தேசியத்துடன் சேர்த்து, தெய்வீகத்தையும் அவர் போற்றினார்.
"தேவாரம் திரு வாசகமும்
திகழும் சேக்கிழார் புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்