குஸ்தியில் கவுன்சிலர்கள்.... செல்லரித்துப்போன திமுக... முடிவுரை நெருங்கியது!

Update: 2024-01-14 03:18 GMT

தென் மாவட்டத்தில் வந்த இடி போன்ற செய்தி அதிர்ச்சியில் அறிவாலயம்! 


திமுக அரசு 2024 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே மூன்று அமைப்புகள் தரப்பிலிருந்து போராட்டங்களை சந்தித்தது. அதற்கு முன்பாக கடந்த டிசம்பர் மாதத்திலும் தமிழகத்தில் பெய்த கன மழையால் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் கண்ட பெரும் பாதிப்பு திமுக அரசிற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் தூத்துக்குடியில் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் மழைநீர் வழியாத நிலையில் உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. 


முன்னதாக திமுக அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருப்பதும் அமைச்சராக இருந்த பொன்முடி தனது பதவியை இழந்து தற்போது சிறை தண்டனை பெற்றிருப்பதும் மக்கள் மத்தியில் திமுகவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் திமுக உக்கட்சி பூசலாலும் பெரும் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக திருநெல்வேலியில் திமுக கவுன்சிலர் மற்றும் மேயருக்கிடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி சண்டை என்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது அதில் 51 கவுன்சிலர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக உள்ளனர். 


இப்படி அதிமுகவை விட மாநகராட்சியில் அசுர பாலத்தில் இருக்கும் திமுக தன் சார்பாக பி எம் சரவணன் மேயராக தேர்வு செய்தது இதற்கு முக்கிய காரணமாக அப்போது மாவட்ட செயலாளராக இருந்து அப்துல் வஹாப் தனக்கு தெரிந்தவர் மற்றும் வேண்டுபட்டவர் என்ற காரணத்திற்காக சரவணன் அவர்களுக்கு மேயர் பொறுப்பு கிடைக்கும் படி ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மேயராக பொறுப்பேற்ற சரவணன் சில மாதத்திலேயே அப்துல் வகாப்பிற்கு எதிராக செயல்பட ஆரம்பித்துள்ளார். இதனால் பல ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் அவருக்கு எதிராக திரும்ப ஆரம்பித்தனர். மேலும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மாநகராட்சி கூட்டங்களில் மேயரை வெளிப்படையாக குற்றம் சாடினர்! 


அதுமட்டுமின்றி மேயர் கொண்டுவரும் தீர்மானங்கள் அனைத்திற்கும் மறுப்பு தெரிவித்து முரண்டு பிடித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து நெல்லையில் மேயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கையுடன் அமைச்சர் கே என் நேருவிடமும் கட்சி தலைமையிடமும் பலமுறை முறையிட்டுள்ளனர். இருப்பினும் கட்சி தலைமை கவுன்சிலர்களை சமாதானப்படுத்திய அனுப்பிவைத்து வந்துள்ளது. 


இதற்குப் பிறகு மாவட்டச் செயலாளராக இருந்த அப்துல் வகாப் மாற்றப்பட்ட பிறகு கடந்த மாதம் 38 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மான மனுவை ஆணையரிடம் அளித்தனர். இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றால் அது ஆளுங்கட்சிக்கு அவபேரை ஏற்படுத்தும் என திமுக தலைமை யோசித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அனுப்பி வைத்து சமாதான பேச்சு நடத்தப்பட்டுள்ளது அதற்கு பிறகும் மேயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கையில் பிடிவாதமாக இருந்துள்ளனர் கவுன்சிலர்கள். 


ஆனால் கட்சியின் முடிவு என்பது மேயருக்கு சார்பாக நிற்க வேண்டும் என்பதை ஏனென்றால் நம்பிக்கை இல்லாத தீர்மானம் வெற்றி பெற்றால் அது நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொளிக்கும்! இந்த நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்பு நடைபெறும் நாள் அன்று எந்த ஒரு கவுன்சிலர்களும் வராமல் இருந்துள்ளனர். அதாவது அப்துல் வகாப் தரப்பைச் சேர்ந்த 40-க்கும் அதிகமான கவுன்சிலர்கள் இரு குழுக்களாக குற்றாலம் கேரளா என சுற்றுலா சென்றுள்ளனர். இதற்கிடையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எப்படியாவது ரத்து செய்து விடலாம் என கட்சி தலைமை அப்துல் வஹாப் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த விஷயம் அறிவாலயத்திற்கும் தெரிந்து முதல்வரும் இந்த விவகாரத்தால் அப்சட்டில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Similar News