மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்ஸை தொடர்பு படுத்திய கம்யூனிஸ்ட் எம்.பி.. பகிரங்கமாக எச்சரித்த ஆர்.எஸ்.எஸ்..

Update: 2024-07-25 15:27 GMT

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சீண்டிய கம்யூனிஸ்ட் எம்.பி: 

மகாத்மா காந்தியின் கொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக திண்டுக்கல் தொகுதி கம்யூனிஸ்ட் எம்.பி சச்சிதானந்தம் அவதூறாக பேசியதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென்னிந்திய ஊடகத்துறை செயலாளர் ஸ்ரீராம் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.பி சச்சிதானந்தம் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர் மேலும் கூறும் பொழுது, "கடந்த 99 ஆண்டுகளில் இந்து ஒற்றுமையின் மூலம் தேசிய மறுசீரமைப்பு, தேசபக்தி மற்றும் பக்தி ஆகியவற்றில் ஆர்.எஸ்எ.ஸ் மேற்கொண்ட நீண்டகால அர்ப்பணிப்பை ஸ்ரீராம் எடுத்துரைத்தார். ஆர்.எஸ்.எஸ் உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனமாகும். அதன் தன்னார்வலர்களால் இந்தியா முழுவதும் 1.5 லட்சம் சேவைப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.


ஆர்.எஸ்.எஸ்- இன் வரலாறு: 

இளைஞர்களிடையே தேசபக்தியைத் தூண்டுவதைத் தடுக்க, அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்-ல் சேருவதைத் தடுக்கும் உத்தரவை பிரிட்டிஷ் அரசாங்கம் ஆரம்பத்தில் பிறப்பித்தது என்று அவர் வரலாற்று நிகழ்வுகளை தெளிவாக சுட்டிக்காட்டினார். அதிலும் குறிப்பாக தேசபக்தியை இந்தியர்களிடம் போக்க வேண்டும், அதற்கு ஆதரவாக இருந்த ஆர்.எஸ்.எஸ்-ஐ தடுக்க இப்படி ஒரு திட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்படுத்தியதாகவும் கூறினார். இந்த உத்தரவு சுதந்திரத்திற்குப் பிறகு நீக்கப்பட்டது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்துச் சுதந்திரத்துடன் இணைந்தது. இருப்பினும், 1966ல், பிரதமர் இந்திரா காந்தி, மத்திய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் சேருவதைத் தடுக்கும் இதேபோன்ற உத்தரவை மீண்டும் அமல்படுத்தினார். ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானதாகக் கருதப்படும் இந்த உத்தரவை, தற்போதைய மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்து, கருத்துச் சுதந்திரத்துக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொண்டாடியது.

அரசியல், ஆன்மிகம், கலாச்சாரம், தொழிற்சங்கம், சேவை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்று ஸ்ரீராம் சுட்டிக்காட்டினார். இந்த சாதனைகள் இருந்தபோதிலும், சி.பி.ஐ-எம் கட்சியைச் சேர்ந்த இரண்டு தமிழக எம்.பி.க்கள் தடை உத்தரவை அரசாங்கம் நீக்கியதை எதிர்த்துள்ளனர், எம்.பி சச்சிதானந்தம் காந்தியின் படுகொலையை ஆர்.எஸ்.எஸ் மீது திருப்பு முயற்சியாக பொய் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக கூறினார். 1948-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, ​​ஆர்.எஸ்.எஸ் ஆரம்பத்தில் தடை செய்யப்பட்டதை அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார். ஆனால், இந்தக் கொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் பின்னர் தீர்ப்பளித்ததையடுத்து, தடை நீக்கப்பட்டது. பல்வேறு விசாரணைக் கமிஷன்களும் இந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளன.


ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நோக்கி வரும் பொய் குற்றச்சாட்டுகள: 

மகாத்மா காந்தி 1934 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் வார்தாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் முகாமுக்குச் சென்று அந்த அமைப்பின் நடைமுறைகளை ஒப்புக்கொண்டதாகவும் ஸ்ரீராம் குறிப்பிட்டார். இருந்த போதிலும், ஆர்.எஸ்.எஸ் இன் எதிர்ப்பாளர்கள், காந்தியின் கொலையுடன் அமைப்பை தொடர்புபடுத்தி தவறான கதைகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர், சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ளும் போது நீதிமன்றத்தில் தங்கள் அறிக்கைகளை திரும்பப் பெறுகிறார்கள். 1962 சீன-இந்தியப் போருக்குப் பிறகு, சாவர்க்கருடன் தொடர்புடைய தேசியவாத அமைப்புகளை மறைமுகமாக ஆதரித்து, குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க நேரு ஆர்.எஸ்.எஸ்ஸை அழைத்தார். சீதாராம் கேசரி, அர்ஜுன் சிங், திக்விஜய் சிங் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் இதேபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக அவதூறு வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர் என்று அவர் வலியுறுத்தினார்.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது அவதூறான கருத்துக்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த வகையில் எம்.பி சச்சிதானந்தம் தனது அவதூறான கருத்துக்களை திரும்பப் பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றும் ஆர்.எஸ்.எஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Input & Image courtesy: The Commune News

Tags:    

Similar News