ஏடிஜிபியின் புகாரும்,அலுவலக தீ விபத்தும்:டிஜிபி அலுவலகத்தின் பதில் இதுவா!முழு பின்னணி!

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் முதல் ஏடிஜிபி வரை
அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன் வைத்த ஏடிஜிபியான கல்பனா நாயக் சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் பல கோடி ரூபாய் சம்பள வேலை அமெரிக்காவை கிடைத்தும் அதை உதறிவிட்டு ஐபிஎஸ் ஆன கல்பனா நாயக் பஞ்சாப் ஆந்திரா தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார் மேலும் இவர் கடந்த வருடம் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும் இருந்துள்ளார்
உதவி ஆய்வாளர் தேர்வில் நடந்த முறைகேடு
கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழக காவல்துறைக்கு 621 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்கான அறிக்கை மே மாதத்தில் வெளியிடப்பட்டது அந்த அறிவிக்கையில் நடத்தப்பட்ட தேர்வில் இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது இதனை அடுத்து இது தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரித்து இட ஒதுக்கீடு கடைபிடிப்பதில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய ஆணையிட்டது இதற்குப் பிறகு புதிதாக 41 பேர் சேர்க்கப்பட்டதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது ஆனால் அதிலும் குளறுபடிகள் இருப்பதால் புதிய பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது ஆனால் அதில் எந்தவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை
தீ பற்றி எரிந்த ஏடிஜிபி கல்பனா நாயக் அலுவலகம்
இந்த சூழ்நிலையில் தான் காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் பிற பணிகளுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அந்த முறைகேடுகள் குறித்த விரிவான அறிக்கையை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் தயாரித்து அளித்ததாகவும் அதனை கண்டு கொள்ளவில்லை என்றும் ஏடிஜிபி கல்பனா நாயக் குற்றச்சாட்டை முன் வைத்தார் அதுமட்டுமின்றி சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தின் முறைகேடு பற்றியும் காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் ஏற்பட்ட இட ஒதுக்கீடு முறைக்கேடு பற்றியும் குற்றச்சாட்டை முன் வைத்தார்