அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் - மத்திய அரசின் அசத்தல் திட்டம்

அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துவருகிறது.

Update: 2022-09-24 09:25 GMT

அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துவருகிறது.

4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைப்பது தொடர்பாக மத்திய குழந்தைகள் நல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 4 லட்சத்து 37,000 அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் புதிய அங்கன்வாடி மையங்களிலோ அல்லது அவற்றுக்கு அருகில் ஊட்டச்சத்து தோட்டங்களை அமைப்பதற்கு இடங்களை தேர்வு செய்ய 40 ஆயிரம் முகங்கள் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மூலிகை செடிகள் நடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source - Polimer News

Similar News