முதல் முறையாக காதி மற்றும் கிராம தொழில்களின் விற்பனை 1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது - சாத்தியப்படுத்திய பிரதமர் மோடி

சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை மேம்படுத்த அரசு அதிக கவனம் செலுத்துகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-01 07:28 GMT

சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை மேம்படுத்த அரசு அதிக கவனம் செலுத்துகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நடந்த தொழில் முனைவு நிகழ்ச்சிகள் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 6000 கோடி அளவிலான குரு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் செயல் திறன் அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்தல் திட்டம் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் ஆகியவற்றின் புதிய அம்சங்களை திறந்து வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, 'குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை வலுப்படுத்த கடந்த எட்டு ஆண்டுகள் எங்களது அரசாங்கம் பட்ஜெட்டை 650 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தி உள்ளது'

இந்தியாவில் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது நாட்டின் தயாரிப்புகள் புதிய சந்தைகளை அடைய குறு, சிறு நடுத்தர தொழில் துறை இருப்பது மிகவும் முக்கியம். இத்துறை நிறுவனங்கள் இந்தியாவில் வளர்ச்சி பயணத்தின் மிகப்பெரிய தூண் நாட்டின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை இவை கொண்டிருக்கின்றன.


இந்தியா இன்று 100 ரூபாய் சம்பாதிக்கிறது என்றால் குறு, சிறு நடுத்தர தொழில் துறையால் 30 ரூபாய் வருகிறது, உங்களது தயாரிப்புகளை அரசுக்கு விநியோகம் அரசு மின் சந்தையில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்றார்

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பகுதியிலும் தனித்துவமான உள்ளூர் உற்பத்திய உலகளவில் உருவாக்க முடிவு செய்துள்ளோம், அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது கடந்த எட்டு ஆண்டுகளில் காதி விற்பனை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. முதல் முறையாக காதி மற்றும் கிராம தொழில்களின் விற்பனை ரூபாய் 1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது என பிரதமர் பெருமையாக கூறினார்.


Source - Maalai Malar

Similar News