'அவர்கள் குழந்தைகள்' - வயநாட்டில் ராகுல் காந்தியே குழந்தைகள் என கூறியது யாரை தெரியுமா?

'எனது அலுவலகத்தை தாக்கியவர்கள் குழந்தைகள்' என ராகுல் காந்தி வயநாட்டில் கூறியுள்ளார்.

Update: 2022-07-02 06:38 GMT

'எனது அலுவலகத்தை தாக்கியவர்கள் குழந்தைகள்' என ராகுல் காந்தி வயநாட்டில் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 24 ஆம் தேதி ராகுல் காந்தி என் வயநாடு அலுவலகத்தில் புகுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாணவர் பேரவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

அங்கு ராகுல் காந்தியின் அலுவலகத்தை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் அவரது உட்காரும் இருக்கையில் வாழை மரத்தை நட்டு வைத்து விட்டு சென்றனர்.

இந்த நிலையில் கேரளாவிற்கு நேற்று பயணம் மேற்கொண்டார் ராகுல் காந்தி தாக்குதலுக்கு உண்டான தமது அலுவலகத்தை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது, 'இது வயநாடு மக்களின் அலுவலகம் இந்த சம்பவம் நடந்தது துரதிஷ்டவசமானது, ஒருபோதும் வன்முறைகள் பிரச்சனைகளை தீர்க்காது. இதை செய்தவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டனர், அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும், விரோதமும் இல்லை அவர்கள் குழந்தைகள். செயலின் விளைவுகளை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை' என தெரிவித்தார்

தமது அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அவர் பேரணியாக நடந்து சென்றார்.




Source - Maalai malar

Similar News