VHP தலைவர் கொலை வழக்கு.. NIA பரபர குற்றப்பத்திரிகை.. பின்னணியில் வெளியான பகிர் தகவல்..

Update: 2024-10-13 05:00 GMT

யார் இந்த விகாஸ் பக்கா? 

விகாஸ் பக்கா என்ற பிரபாகர் ஏப்ரல் 13, 2024 அன்று ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள தனது கடையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராக இவர் இருந்தார். VHP தலைவர் விகாஸ் பிரபாகர் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு பஞ்சாபில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது. பஞ்சாபில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) நாங்கல் பிரிவுத் தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஆயுத சப்ளையர் ஒருவரை, தேசிய புலனாய்வு முகமை (NIA) உடனான கூட்டு நடவடிக்கையில் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவினர் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சப்ளை செய்த குணால் என்ற தர்மிந்தர் குமாரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவோடு ஒருங்கிணைந்த நடவடிக்கையில் லூதியானாவில் இருந்து சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.


NIA அறிக்கை என்ன சொல்கிறது? 

கைது செய்யப்பட்ட நபர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை வாங்கியதாகவும், வெளிநாட்டைச் சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்விந்தர் குமார் என்ற சோனுவின் வழிகாட்டுதலின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு அவற்றை சப்ளை செய்ததாகவும் தேசிய புலனாய்வு முகவை விசாரணைகள் வெளிவந்து இருக்கிறது. NIA அறிக்கையின்படி, பாகிஸ்தானை சேர்ந்த தீவிர அமைப்பின் தலைவர் ஆன வாதாவா சிங், தலைமறைவான இரண்டு குற்றவாளிகள் மற்றும் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களுடன், இலக்கு வைக்கப்பட்ட கொலைக்கு மூளையாக செயல்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட இருவர் பஞ்சாப் மாநிலம் நவன்ஷஹரைச் சேர்ந்த மங்கிலி என்கிற மந்தீப் குமார் மற்றும் ரிக்கா என்ற சுரீந்தர் குமார் எனப் பெயரிடப்பட்டுள்ளனர். தலைமறைவான குற்றம் சாட்டப்பட்டவர்களில் வாதாவா சிங் மற்றும் அவரது கூட்டாளிகள், நவன்ஷஹரைச் சேர்ந்த ஹர்ஜித் சிங் மற்றும் ஹரியானாவின் யமுனாநகரைச் சேர்ந்த குல்பீர் சிங் என்ற சித்து ஆகியோர் அடங்குவர். இந்த நபர்கள் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் நிதி உதவியை வழங்கியதாக NIA கூறுகிறது. வாதாவா சிங் பாகிஸ்தானில் உள்ள நிலையில், ஹர்ஜித் சிங் மற்றும் குல்பீர் சிங் தற்போது ஜெர்மனியில் உள்ளனர். மே 9, 2024 அன்று பஞ்சாப் காவல்துறையிடம் இருந்து வழக்கை எடுத்துக் கொண்ட NIA, இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள ஒரு நாடுகடந்த சதியைக் கண்டுபிடித்தது. 

பின்னணியில் இருக்கும் உலகளாவிய நெட்வொர்க்: 

கொலையை நிறைவேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த BKI செயல்பாட்டாளர் ஒன்றாக வேலை செய்தனர். இந்த நடவடிக்கையை வாதாவா சிங் பாகிஸ்தானில் இருந்து இயக்கியதாகவும், ஹர்ஜித் மற்றும் குல்பீர் ஜெர்மனியில் இருந்து ஒருங்கிணைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ள உலகளாவிய நெட்வொர்க்கை NIA தொடர்ந்து விசாரித்து வருகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News