சிறப்பு கட்டுரை: யோகி ஆதித்யநாத்தின் பொருளாதார நடவடிக்கைகள் வளர்ச்சியுடன் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குமா?
சிறப்பு கட்டுரை: யோகி ஆதித்யநாத்தின் பொருளாதார நடவடிக்கைகள் வளர்ச்சியுடன் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குமா?
தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்திர பிரதேச அரசாங்கத்தின் தலைமையை நம்பியிருக்கிறார்கள். உத்திர பிரதேச மாநில பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதை இந்திய அளவில் Ease of Doing Business தரப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு உத்திர பிரதேசம் முன்னேறி இருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டாக, தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் சீனாவை விட்டு தனது உற்பத்தி ஆலைகளை வெளியே வெளியேற்றியது. இந்நிலையில் உத்திர பிரதேச அரசாங்கம் தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்சிற்கு டிஸ்ப்ளே ஆலை அமைப்பதற்கு நிறைய நிதி சலுகைகள் வழங்க இருக்கிறது. இதற்கு 655 மில்லியன் டாலர்கள் செலவாகும். ஆனால், இதன்மூலம் மேக் இன் இந்தியா திட்டம் உத்வேகம் பெறும். இதன் மூலம் இந்தியாவை ஒரு உற்பத்தி மையமாக நாம் உலகிற்கு தெரியப்படுத்தலாம்.
சாம்சங் ஏற்கனவே உத்திர பிரதேசத்தில் உலகத்தின் மிகப்பெரிய மொபைல் போன் தயாரிப்பு ஆலை வைத்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உத்திர பிரதேசத்தைப் பொருத்தவரை வேலைவாய்ப்பிற்கு தகுந்த வாய்ப்புகளை வழங்குவதும், சுயதொழில் ஆரம்பிப்பதற்கு தொழில் வாய்ப்புகளை இளைஞர்களின் திறமைகளுக்கு ஏற்ப வழங்கி அவர்களை மாநிலத்தின் முன்னேற்றத்தில் பங்கு எடுக்க வைப்பதும் முக்கியமான நோக்கங்களாகக் கொண்டுள்ளது. இதற்கு இளைஞர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வது மிகுந்த அவசியமாகும்.
இந்த நோக்கத்துடன் மார்ச் 2021 வரைக்கும் வரைக்கும் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் "மிஷன் ரோஸ்கர்" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் பல்வேறு துறைகள், அமைப்புகள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வழங்குவதோடு தன்னார்வ நிறுவனங்கள், பலவிதமான வாரியங்கள், மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் பயிற்சி பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதனால் இந்த நிதியாண்டின் முடிவில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், சுயதொழிலிற்கும் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.