தமிழகத்திலிருந்து அயோத்தி செல்லும் பக்தர்களுக்காக மத்திய அரசு இயக்கும் 34 ரயில்களும் சிறப்பான இலவச ஏற்பாடுகளும்!

தமிழகத்திலிருந்து அயோத்தியில் ஸ்ரீ ராமரை தரிசனம் செய்வதற்காக செல்ல இருக்கும் பக்தர்களுக்கு மத்திய அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.

Update: 2024-02-08 09:45 GMT

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமரை தரிசிப்பதற்காக மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதை பற்றி அண்ணாமலை தெரிவித்துள்ளார். "தமிழகத்திலிருந்து, அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் செல்லும் பக்தர்களுக்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில்கள், கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்குச் செல்லவிருக்கின்றன.

தமிழகத்தில் இருந்து அயோத்தி ஶ்ரீராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களின் பயணக் கட்டணம், உணவு, தங்குமிடம் மற்றும் தரிசனக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது. ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இறைவனை தரிசிக்க அனைவருக்குமே அருள் உண்டு. மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த சிறப்பான சலுகைகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழகத்திலிருந்து அயோத்திக்கு செல்வதற்கான முதல் சிறப்பு ரயில் கோவையில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளத. தமிழகத்தில் இருந்து, அயோத்தி ஶ்ரீராமர் கோவில் தரிசனத்துக்குச் செல்லவிருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான, மன நிறைவான தரிசனம் கிடைக்க, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


SOURCE :NEWS 


Similar News