கோவையில் பரபரப்பு: குளத்தில் வீசப்பட்ட 7 ஐம்பொன் சிலைகள் மீட்பு.!

கோவையில் பரபரப்பு: குளத்தில் வீசப்பட்ட 7 ஐம்பொன் சிலைகள் மீட்பு.!

Update: 2021-02-22 17:25 GMT

கோவை அருகே கோயில் குளத்தில் இருந்து 7 ஐம்பொன் சிலைகளை போலீசார் மீட்ட சம்பவம் இந்துக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பேரூரில் உள்ள ஒரு கோயில் குளத்தில் ஐம்பொன் சிலைகள் கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் இதுபற்றி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து சென்று கோயில் குளத்தில் இருந்த விஷ்ணு, அம்மன், விநாயகர் உள்ளிட்ட 7 ஐம்பொன் சிலைகளை மீட்டனர்.

இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐம்பொன் சிலைகள் குளத்தில் வீசப்பட்ட சம்பவம் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்துக்களின் கடவுள்களை விஷமிகள் திருடி செல்வது வாடிக்கையாகிவிட்டது. அது போன்றவர்களை போலீசார் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

Similar News