கிருஷ்ண பகவான் உயிர் பிரிந்த அதிசய இடத்தில் அமைந்திருக்கும் ஆச்சரிய ஆலயம்!
குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயம். சிவாலயங்களுள் மிகுந்த பிரசத்தி பெற்றது. குஜராத் மாநிலத்தில், கிர்சோமநாத் மாவட்டத்தில், பிரபாச பட்டிண கடற்கரையில் அமைந்துள்ளது இக்கோவில் . 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான தலமாக இது திகழ்கிறது
மேலும் இக்கோவிலில் தான் ஆதி சங்கரர் அவர்கள் ஸ்தாபித்த சாராதா பீடம் உள்ளது. ஜோதி லிங்கத்தின் பின் அமைந்துள்ள அம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்று பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியது.
இந்த கோவில் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் பெருவதை போலவே, இந்திய வரலாற்றில் பெரும் முக்கியத்துவத்தை பெரும் கோவிலாகவும் திகழ்கிறது. அதன் காரணம், இஸ்லாமிய மன்னர்கள் உருவ வழிபாட்டின் மீது நம்பிக்கையின்றி அதை எதிர்க்கும் மனநிலையில் இருந்ததால் கிட்டதட்ட 6 முறை இந்த கோவிலை இடித்து தள்ளி தரைமட்டமாக்கியுள்ளனர்.
இங்குள்ள சிவ பெருமன் அதீத ஒளியுடன் பிரகாசிப்பதால் அந்த பிரகாசத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முற்பட்டும், இங்குள்ள செல்வ வளத்தின் பெருமையை அறிந்தும் 17 முறை படையெடுத்து, இறுதியாக பல்லாயிரக்கணக்கான் இந்து மக்களை, கொன்று குவித்து கோவிலை கொள்ளையடித்தான் கஜினி என்பது வரலாறு. அன்று அவன் எழு வண்டிகள் நிறைய அள்ளி சென்ற தங்கமும், வெள்ளியும் இன்றைய மதிப்பில் பல்லாயிரம் கோடி தேரும் என்கிறார்கள் ஆய்வாளார்கள்.
அன்று அவன் திருடி சென்ற தங்கம், வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டுவரும் முயற்சியில் 1842 ஆம் ஆண்டின் கவர்னர் ஜென்ரல் லார்ட் எல்லன்பாரோ முயன்ற போது இங்கிலாந்து நாட்டு அரசியலில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஒரு தலை பட்சமாக அவர் செயல்படுகிறார் என்ற குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. எனவே திரும்ப எடுத்து வரப்பட்ட கதவுகள் இன்றும் ஆக்ராவில் இருப்பதாக சொல்லபடுகின்றது.
ஆறு முறை தரைமட்டமாக்கப் பட்ட இந்த கோவில், ஒவ்வொறு முறையும் பிரமாண்டமாக எழுந்தது. இன்று நாம் காணும் கோவில் சாளுக்கியரின் கட்டிடக்கலையின் அம்சமாக பிரமிடு வடிவில் விசாலமாக கட்டப்பட்டுள்ளது .