நல்ல கனவுகளை கண்டபின் இவற்றை செய்தால் நிச்சயம் பலிக்கும் என்கிறது மத்ஸ்ய புராணம்.!
நல்ல கனவுகளை கண்டபின் இவற்றை செய்தால் நிச்சயம் பலிக்கும் என்கிறது மத்ஸ்ய புராணம்.!
கனவு என்பது நிறைவேறாத ஆசைகள் அல்லது நிறைவேற வேண்டும் என நம் ஆழ்மனதில் இருக்கும் ஆசைகள். இந்த கருத்தை வேதங்களும் சரி, விஞ்ஞானமும் சரி இரண்டுமே ஆதரிக்கிறது. ஒரு சில நேரங்களில் நமக்கிருக்கும் ஆசிகளின் காரணமாக, ஆன்மீக சாதனாக்களின் காரணமாக வருங்காலத்தில் நடக்க விருப்பதை உணர்த்தும் அறிகுறியாக கூட சில கனவுகள் அமைவதுண்டு.
ஒரு சில கனவுகள் நமக்கு ஏதோவொரு செய்தியை உணர்த்த நமக்கு கனவில் வருவதாக கனவு சாஸ்திர் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வெற்றி, செல்வம், ஆரோக்கியம், முக்கிய திருப்பு முனை மற்றும் ஏதேனும் தோஷங்களை நமக்கு அறிவுருத்த கனவுகள் வரலாம் என சொல்லப்படுகிறது. அது கனவுகளின் தன்மையை பொறுத்தது.
கனவுகள் குறித்த பல விஷயங்களை நாம் படித்து அறிந்திருப்போம். எவையெல்லாம் நல்ல அறிகுறி, எவையெல்லாம் தீய அறிகுறி என ஆழமாக இல்லாவிடினும் மேலோட்டமான பார்வை நமக்குண்டு. இதில் நாம் காண்கிற பெரும்பாலான கனவுகளை நம்மால் நினைவு கூற முடிவதில்லை. மிகவும் முயற்சித்தால் ஒரு சில காட்சிகளை கோர்வையின்றி நம்மால் நினைவு கூற முடியும். ஆனால் இதற்கு விதிவிலக்காக, ஒரு சில கனவுகள் மனதில் ஆணி அடித்தாற் போல் பதிந்திருக்கும் எல்லா நிகழ்வுகளையும், காட்சிகளையும் மனிதர்களையும் நம்மால் நினைவு கூற முடியும்.
எனவே, இந்த கனவுகள் தொடர்பாக மத்ஸ்ய புராணத்தில் சில முக்கிய குறிப்புகள் உண்டு. நினைவில் வைத்து கொள்ள கூடிய கனவுகளுக்கு நம் உடலில், உளவியலில், மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை உண்டு. எனவே ஒரு நல்ல கனவினை நாம் கண்டிருந்தால் மத்ஸ்ய புராணத்தின் அடிப்படையில் ஒருவர் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது.
நல்ல கனவிற்கு பின், அது குறித்த முழுமையான தகவல்களை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என சொல்லப்படுகிறது. மாறாக, ஒரு நல்ல கனவினை கண்ட பின், உடனடியாக கணபதி மந்திரத்தை பாராயணம் செய்வது நல்ல பலனை தரும்.