மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தீ விபத்து வேதனை அளிக்கிறது.. பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி.!

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இன்று காலை 6.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-02 11:07 GMT

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இன்று காலை 6.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீ விபத்திற்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேதனை அளிப்பதாக ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளார். அது மட்டுமின்றி தீ விபத்திற்கான காரணங்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.


 



இந்நிலையில், நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் இன்று (2.06.201) காலை தீபாரதனை முடிந்தப்பின் 6.30 மணியளவில் கருவறையில் தீ விபத்து ஏற்பட்டது வேதனைக்குரியது. இந்த தீ விபத்திற்கான காரணிகளை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News