நெல்லை உச்சினி மாகாளி அம்மன் கோயில் கொடைவிழா.!
கொடை விழாவானது நேற்று குடியழைப்புடன் துவங்கியது. இன்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து ரதவீதிகளில் வலம் வந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது.
நெல்லை மாவட்டம், நகர் பகுதி சாலியர் தெருவில் வீற்றிருக்கும் அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் கொடைவிழா சீறும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.
கொடை விழாவானது நேற்று குடியழைப்புடன் துவங்கியது. இன்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து ரதவீதிகளில் வலம் வந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது.
தற்போது நெல்லையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், அனைவரும் முககவசம் அணிந்து கொண்டு பால்குடம் எடுத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.